தமிழகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் (விடுமுறை கிடையாது) செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான ஓட்டுநர் உரிமம் நிலுவையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்காக மட்டுமே சனிக்கிழமையன்று செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் செல்வோர், அரசு ஊழியர்கள் லைசென்ஸ் பெற ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.