திமுகவின் ஆட்டம் இன்னமும் 48 மணி நேரம்தான் நேரம் நெருங்கிடுச்சி என பாஜகவின் மூத்த தலைவரான  ஹெச்.ராஜா ட்வீட் செய்துள்ளார்.  தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில், செந்தில் பாலாஜியின்  விவகாரத்தில், தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாக பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்து இருக்கிறார்.

செந்தில் பாலாஜி இருக்கிறாரா? அப்படி இருந்தால் காவேரி மருத்துவமனையில் தான் இருக்கிறாரா? என்கின்ற பல சந்தேகங்கள் தீர்வு கிடைக்கும் நேரம் நெருங்கி விட்டது. தமிழக அரசின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும். ஆட்டம் முடிவிற்கு வருமா அல்லது ஆட்சியே முடிவுக்கு வருமா? என குறிப்பிட்டுள்ளார்.