சென்னையில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக லண்டன், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானங்கள் உட்பட மொத்தம் எட்டு விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தே பிறகு தரையிறங்கின.

சென்னையிலிருந்து செல்ல வேண்டிய 12 விமானங்கள் 30 நிமிடம் முதல் மூன்று மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.