காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பாளையத்தில் அமைந்துள்ள சேர்மன் சாமிநாத முதலியார் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். பள்ளிக்கு ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை விட்டுள்ள நிலையில் மூடப்பட்ட பள்ளியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறி உள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்தவர்கள் பள்ளியின் உள்ளே சென்று பார்த்த போது ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.