திருச்சி மாவட்டம் ஈபி ரோடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது பேரனின் பெயர் சூட்டும் விழாவில் பங்கேற்க பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த அவர் தவறுதலாக கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காந்தி மார்க்கெட் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.