கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நட்டாலம் பகுதியில் ஸ்ரீஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது தாய் ராதா அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் ஸ்ரீஜாவும் உறவினர்களும் குளத்திற்கு சென்றனர். அங்கு தண்ணீரில் மிதந்த ராதாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு ராஜாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றதால் ராதா தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.