நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பேக்கரி கடையில் வைத்து வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சிவகுமார் என்பவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.