ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 29 வயதான பட்டதாரி இளைஞர் இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் 21 வயதான பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் முகூர்த்த நேரத்தில் மணமகன் பக்கத்தில் அமர்ந்த மணமகள் தாலி கட்டும் நேரத்தில் தாலியை பிடுங்கி கோயில் உண்டியலில் போடுவதற்கு முயற்சி செய்துள்ளார்.

அப்பொழுது உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தி மணமகள் கேட்க வில்லையாம். தன்னுடைய பெற்றோரின் வற்புறுத்ததினால் தான் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதாக கூறியதோடு இப்பொழுது திருமணம் வேண்டாம் என்று ஒரே முடிவாக இருந்துள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேசியும் மணப்பெண் தன்னுடைய முடிவு மாற்றிக் கொள்ளவில்லை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.