கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரில் இருந்து சிக்கபல்லாபுரா நோக்கி காரில் நான்கு மாணவர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சிக்கபல்லாபுரா புறநகர் பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஒரு மாணவர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.