மும்பையில் இருந்து டெல்லிக்கு ஹெராயின் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது நைஜீரியாவை சேர்ந்த விக்டோரியா என்ற பெண் கேப்சூல் வடிவில் ஹெராயினை மும்பையில் இருந்து டெல்லிக்கு கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் உடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த 20 கேப்சூல் ஹெராயினை பறிமுதல் செய்ததோடு கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் பெண் குற்றத்தை ஒப்புகொண்டதோடு ‘ஒன்யே’ என்ற நபர் தான் இந்த வேலையை கொடுத்ததாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.