இந்தியாவில் கடந்த வருடம் பெண்கள் மீது அதிக ஆசிட் தாக்குதல்கள் நடந்த நகரங்களின் பட்டியலை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின்படி பெண்கள் மீது அதிகமாக ஆசிட் தாக்குதல் நடத்திய முதல் நகரம் பெங்களூரு.

19 பெருநகரங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்த பெங்களூரில் கடந்த ஆண்டு மட்டும் 8 பெண்கள் மீது ஆசிட் தாக்குதல் நடந்துள்ளது. அதேபோன்று இரண்டாவது இடத்தை பிடித்த டெல்லியில் ஏழு பெண்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. மூன்றாவது இடத்தைப் பிடித்த அகமதாபாத்தில் ஐந்து பெண்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது.