சத்தீஸ்கரில் உள்ள பல்லோடா கிராமத்தை சேர்ந்த சுபம் சோனி என்பவருக்கு ஸ்ரீநாராயன் பகுதியை சேர்ந்த பெண்ணுடன் நேற்று திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில் புதுமண தம்பதி மற்றும் குடும்பத்தினர் மூவர் என ஐந்து பேர் இன்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த ட்ரக் இவர்களது காருடன் நேருக்கு நேராக மோதி உள்ளது.

இந்த விபத்தில் மணமகள் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மணமகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.