இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்காக பல சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது sbi வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதாவது அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யுங்கள் மற்றும் ஓடிபி சொல்லுங்கள் என்று வரக்கூடிய எந்த ஒரு தொலைபேசி அழைப்பையும் பொருட்படுத்த வேண்டாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி அழைப்பவர்களின் அழைப்பை உடனே துண்டிக்க வேண்டும் என்றும் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.