ஆஸ்திரேலியாவில் ஊபர் கார் ஓட்டுநருக்கும், இரண்டு பெண் பயணிகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பயணத்தைத் தொடர மறுத்த ஓட்டுநர், பயணிகளைப் பதிவு செய்த முன்பதிவை ரத்து செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், தாங்கள் ரத்து செய்தால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால் பயணிகள் காரை விட்டு இறங்க மறுத்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஓட்டுநர், கையில் இருந்த சூடான காபியைப் பயணிகள் மீது வீசியதாகக் கூறப்படுகிறது, இதில் ஒரு பெண்ணுக்குக் காயம் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மக்கள் இரு தரப்பிலும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ஓட்டுநர் பயணிகளை காரை விட்டு இறங்கச் சொன்னபோது, அவர்கள் ஏன் உடனடியாக இறங்கவில்லை என்று ஒரு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர்; அதேசமயம், எந்தச் சூழ்நிலையிலும் ஓட்டுநர் வன்முறையில் ஈடுபட்டிருக்கக் கூடாது என்றும், காபியை வீசிப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தியது தவறு என்றும் மற்றொரு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
I have an insane video coming of a migrant Uber driver throwing hot coffee at two Australian girls and the two girls fought back.
I’ve been sent the start of the interaction and been told the full video is getting sent soon.
One girl is in hospital with burns and I’ve been… pic.twitter.com/E9dAvw6eGu
— Rizza (@Rizzabeast) June 20, 2026
“>
ஒரு சாதாரணப் பயணத் தகராறு முற்றிய நிலையில், அது உடல் ரீதியான மோதலாக மாறியது பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஓட்டுநரின் செயல் மற்றும் பயணிகளின் அணுகுமுறை என இரண்டு தரப்பிலும் உள்ள நியாயங்கள் குறித்து நெட்டிசன்கள் தங்களுக்குள் விவாதித்து வருகின்றனர்.
