திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள மிட்டாளம் பகுதியில் மருத்துவம் படிக்காமல் ஒருவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக ஆம்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் உமராபாத்துக்கு தகவல் கிடைத்தது. அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது மருத்துவம் படிக்காமல் கிளீனிக் வைத்து ஒருவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் வாணியம்பாடியில் சேர்ந்த நாகராஜ் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.