வேலூர் வழியாக லாரி ஒன்று பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை முனிசாமி என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் கன்னிகாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது முனிசாமி முன்னால் சென்ற மற்றொரு லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது இரண்டு லாரிகளும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முனிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று முனிசாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.