விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காகுப்பம் காந்திநகர் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார் இந்நிலையில் கார்த்திகேயனும் அவரது நண்பர் மணிகண்டனும் ஒன்றாக கட்டிட வேலைக்கு சென்று வருவது வழக்கம். நேற்று இருவரும் அந்த பகுதியில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது மணிகண்டன் கார்த்திகேயனிடம் தனக்கு தரவேண்டிய 100 ரூபாய் பணத்தை தருமாறு கேட்டார். மேலும் மணிகண்டன் கார்த்திகேயனை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து கார்த்திகேயன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.