ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மாந்தாங்கல் மோட்டூர் பகுதியில் வள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் 12-ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு ஆங்கில முறையில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதுகுறித்து கிடைத்த தகவலின் படி மருத்துவ மற்றும் ஊரகத்துறை இணை இயக்குனர் விஜயா முரளி தலைமையில் டாக்டர் சக்திவேல், மருந்தாளுனர் வேலு ஆகியோர் வள்ளியை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் மருத்துவ படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது உறுதியானது. இதுகுறித்த புகாரின் பேரில் வள்ளியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அதிகாரிகள் வள்ளி மருத்துவம் பார்த்த வீட்டிற்கு சீல் வைத்தனர்.