சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய வீராணம் பகுதியில் கூலி தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவர் சேலத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்றார். உடல்நிலை சரியானதும் அவர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் கூலி தொழிலாளியின் மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நீங்கள் மருத்துவமனையில் இருந்தபோது உங்களை நிர்வாணமாக படம் எடுத்து வைத்துள்ளேன். நான் கூப்பிடும் இடத்திற்கு வர வேண்டும் என மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து கூலி தொழிலாளியின் மனைவி சேலம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்த விவேகானந்தன்(32) என்பவர் பெண்ணை மிரட்டியது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்த போது அந்த பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்கும் நோக்கத்தில் நிர்வாண படம் எடுத்து வைத்துள்ளதாக பொய் சொல்லி மிரட்டினேன் என அவர் தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.