ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி கணேஷ் பத்ரா – பசந்தி பத்ரா. 2020 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்த நிலையில் இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அக்டோபர் 6ஆம் தேதி அன்று விஷப்பாம்பு ஒன்றை வீட்டிற்கு கொண்டு வந்த கணேஷ் பத்ரா பூஜை ஒன்றுக்காக அதனை வாங்கி உள்ளதாக தனது மனைவியிடம் கூறியுள்ளார்.

ஆனால் அன்றைய தினம் தனது மனைவி மற்றும் குழந்தை தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் பாம்பை கணேஷ் பத்ரா விட்டுள்ளார். அடுத்த நாள் காலையில் பசந்தி பத்ரா மற்றும் குழந்தை பாம்பு கடித்து இறந்த நிலையில் கிடந்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ஒன்றரை மாதம் கழித்து சாட்சிகள் சேகரித்து கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.