நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும் அதிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி ? விழிப்புடன் எப்படி செயல்படுவது ? என்பது உள்ளிட்ட முக்கியமான கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  சைபர் பாதுகாப்பு என்றால் என்ன ? எனது குறித்து SBI விளக்கமளித்துள்ளது அதன்படி, 

தீங்கிழைக்கும் தாக்குதல்களிலிருந்து சர்வர்கள், தரவுகள், கணினிகள், மொபைல் சாதனங்கள் மற்றும் நெட்ஒர்க் உள்ளிட்ட மின்னணு உள்கட்டமைப்பை பாதுகாப்பதே சைபர் பாதுகாப்பு ஆகும்.  ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு மோசடி மற்றும் ஹேக்கர்களின் அங்கீகரிக்கப்படாத அணுகளில் இருந்து பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான நடவடிக்கைகளை செயல்படுத்துவதே சைபர் பாதுகாப்பின் நோக்கம் என SBI தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து விரிவாக தெரிந்து சொல்ல SBI-ன் அதிகார பூர்வ பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளவும். 

https://imagescommunications.sbi.co.in/14999669/SBI_Cyber_Security_Booklet_Tamil.pdf