திருவண்ணாமலை மாவட்டம் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் வருகின்ற நவம்பர் 26ம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருவார்கள் என்பதால் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இஅதன்படி வேலூர் கன்டோன்மென்ட்-திருவண்ணாமலை மெமு ரயில் நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்து இரவு 9.50 மணிக்கு வேலூரில் இருந்து புறப்படும் ரயில் நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை செல்லும், மறு மார்க்கத்தில் திருவண்ணாமலை-வேலூர் கன்டோன்மென்ட் ரயிலாகநாளை மற்றும் 27ம்தேதி  இயங்கும். திருவண்ணாமலையில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும். இந்த ரயில் அதிகாலை 5.35 மணிக்கு வேலூர் கன்டோன்மென்ட் வந்தடையும். இந்த ரயில் வேலூர் கன்டோன்மென்ட்-சென்னை பீச் வரை இயக்கப்படும்.