சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டை பராக்கா பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு வருடம் முன்பு தான் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் தேவிக்கு பிறந்தநாள். இதனால் தனது மனைவிக்கு துணி வாங்கி கொடுக்க இளையராஜா தாயிடம் 2000 ரூபாய் கேட்டதாக தெரிகிறது. அதற்கு இளையராஜாவின் தாய் மறுப்பு தெரிவித்தார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த இளையராஜா தனது மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டு படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து தேவி கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளையராஜாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.