சென்னை மாவட்டத்திலுள்ள அமைந்தகரை செனாய் நகரில் பட்டதாரியான சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். வேலை தேடி வந்த சந்தோஷுக்கு நண்பர் மூலம் சைதாப்பேட்டையை சேர்ந்த சீனிவாசன் என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் திருவான்மியூரில் சொந்தமாக நிறுவனம் நடத்தி வரும் சீனிவாசன் தனக்கு தெரிந்த அதிகாரிகள் மூலமாக மெட்ரோ ரயில் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக சந்தோஷிடம் கூறியுள்ளார். இதற்காக சீனிவாசன் சந்தோஷிடம் இருந்து 8 லட்ச ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார்.

ஆனால் கூறியபடி வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். இதனால் சந்தோஷ் பணத்தை திருப்பி கேட்டார். அதற்கு சீனிவாசன் பணத்தை கொடுக்க மறுப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சந்தோஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான சீனிவாசனை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.