வெனிசுலா நாட்டில் உள்ள தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 23 பேர் பலியாகினர். அங்கோஸ்டுராவில் உள்ள புல்லா லோகோ என்ற பகுதியில் சட்டவிரோதமாக தங்க சுரங்கம் செயல்பட்டு வந்துள்ளது. இங்கு வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய 23 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட சூழலில் மேலும் சிலர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.