அமெரிக்காவில் யூடியூப் சேனல் ஒன்று தொடங்கிஅதில் ‘குழந்தைகளை வளர்ப்பது எப்படி?’ என பெற்றோருக்கு அறிவுரை கூறிவிட்டு, தன் பிள்ளைகளை கொடுமைப்படுத்திய தாய் ரூபி ஃப்ராங்கிற்கு 60 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகள் சாத்தானின் பிடியில் சிக்கி இருப்பதாக கூறி, வீட்டிற்குள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

அவரின் 12 வயது மகன் ஜன்னல் வழியே தப்பி வந்து அண்டை வீட்டாரிடம் இருப்பவர்களிடம் உணவு கேட்டுள்ளார். அப்போது நடந்த உண்மை அவர்களுக்கு தெரியவரவே இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.