நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன்  தாக்கல்  செய்தார். அப்போது பேசிய அவர், நடுத்தர வர்க்கத்தினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்றும் பழங்குடி மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிற்துறையினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்தியா சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பிரகாசமான எதிர்காலம் தெரிகிறது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதார ஆய்வறிக்கையில் இந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது என்றார். கடந்த ஒன்பது ஆண்டுகளில் தனிநபர் வருமானம் இரு மடங்காக உயர்ந்துள்ளதாகவும், அனைத்துப் பிரிவினரின் நலனை இலக்காகக் கொண்டு பட்ஜெட் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் கூறினார். இலவச உணவு வழங்கும் திட்டம் 2024 வரை தொடரும் என மத்திய அமைச்சர் அறிவித்தார்.