மார்ச் 13ஆம் தேதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்நிலையில் மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் 23ஆம் தேதி சென்னை வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார். பிப்ரவரி 24 மற்றும் 25-ல் அரசியல் கட்சிகள், காவல் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்ற தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து பிப்ரவரி 23ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்துகிறார். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு மார்ச் 15 முதல் 20ஆம் தேதிக்குள் வெளியிடப்பட வாய்ப்புள்ளது.