தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ஆர்.கே. நகர் பகுதியில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் மரியா வில்சன் கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்குத் தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்கினார். அப்போது அந்தப் பகுதி மக்கள் திரளாகக் கலந்துகொண்டு அமைச்சரிடம் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அந்த சமயத்தில், எதிர்பாராத விபத்து காரணமாகத் தனது இரண்டு கால்களும் செயலிழந்து போன இளைஞர் ஒருவர் அமைச்சரை நேரில் சந்தித்து, தனது வாழ்வாதாரத்திற்காக ஒரு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருமாறு உருக்கமாகக் கோரிக்கை வைத்தார். இளைஞரின் நிலையைப் பார்த்த அமைச்சர், அதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து உடனடியாக வேலை கிடைக்க உதவி செய்வதாக உறுதி அளித்தார்.
விபத்தில் சிக்கிய இளைஞர் வேலை கேட்டு கண் கலங்கி கோரிக்கை.. சிறுவனின் ஆபரேஷனுக்கு தேவையான உதவி செய்வதாக அமைச்சர் மரிய வில்சன் உறுதி
Chennai | TVKminister | 22 June 2026#Newstamil24x7 #Ministermariyawilson pic.twitter.com/8WLNZYpQTz
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) June 22, 2026
அதனைத் தொடர்ந்து, உடல்நிலை சரியில்லாமல் தவித்து வந்த ஒரு குழந்தையின் அறுவை சிகிச்சைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகக் கூறி, அதற்கான பணிகளை உடனே மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
