soco அறக்கட்டளையின் கீழ் சமூகம் அரசியல் சிந்தனை கொண்ட பெரும் படையை உருவாகிய மனித உரிமைகள் ஆர்வலர் மகபூப்பாட்ஷா (64) உடல்நலக்குறைவால் காலமானார். ஏழை எளிய மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். கொத்தடிமை முறையை ஒழித்ததில் இவரின் பங்கு அதிகம். பழங்குடியின மக்கள், பெண்கள், நிலமற்ற விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்தவர். அவரின் மறைவிக்கு சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.