தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த மாதம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்ட நிலையில் இந்த மாதத்திற்கான ஆயிரம் ரூபாய் பணமும் வங்கிக் கணக்கில் வந்து சேர்ந்தது.

இந்த நிலையில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் முதல் மற்றும் இரண்டாவது தவணை ஆயிரம் ரூபாய் பெண்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ள நிலையில் முதல் தவணை பணம் கிடைக்காதவர்கள் இன்றுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த வட்டங்களில் மேல்முறையீட்டு உதவி மையம் மூலம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை அறிந்து இ சேவை மையம் மூலம் தகுந்த ஆவணங்கள் கொடுத்து மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.