கேரளாவில் விரைவில் பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பேருந்தின் உள்ளே பயணிகள் க்யூ ஆர் கோடு மற்றும் யுபிஐ முறையில் பணம் செலுத்தலாம் என்றும் பணம் செலுத்திய பிறகு அவர்களின் செல்போனுக்கு இணைய டிக்கெட் அனுப்பப்பட உள்ளதாகவும் கேரளா போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.