ஆந்திர மாநிலத்தில் தெரு நாய்கள் தாக்கியதில் 16 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகா குளம் மாவட்டம் மேட்டவலசையில் சாத்விகா என்ற 16 மாத குழந்தை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் சுற்றி திரிந்த தெரு நாய்கள் திடீரென்று சிறுமியை சூழ்ந்து கடித்துக் குதறியது.

இந்நிலையில் தலை, கழுத்து மற்றும் முகம் ஆகிய பகுதிகளில் பலத்த காயமடைந்த குழந்தையை குடும்பத்தினர் மீட்டு ராஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தை சிகிச்சை பலன் இன்றை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் இதுபோன்ற நேரங்களில் குழந்தைகளை தனியாக விடாமல் பெற்றோர்களும் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.