ராணுவத்தில் இதுவரையிலும் பெண் அதிகாரிகளாக வான் பாதுகாப்பு, சிக்னல்கள், பொறியாளா்கள், ராணுவ விமான போக்குவரத்து, புலனாய்வு படைகள் உள்ளிட்டவைகளில் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனா். பெண்கள் காலாட்படை, இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை உள்ளிட்ட முக்கியமான போா் முனை ஆயுதங்கள் சாா்ந்த பிரிவுகளில் இதுவரை பெண்கள் பணிபுரியவில்லை.

இந்த நிலையில் முதல் முறையாக இந்திய ராணுவத்தில் போா் முனைகளில் பணிபுரிய பெண்கள் கடந்த ஒராண்டாக பயிற்சி பெற்று சனிக்கிழமை பயிற்சியை முடித்து தோ்ச்சி பெற்று உள்ளனா். இதன் வாயிலாக சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த 5 பெண் அதிகாரிகள், பீரங்கிப் படையில் இணைய இருக்கின்றனர். அவா்கள் முறையாக வருகிற ஏப். 29-ம் தேதியன்று அப்படை பிரிவுகளில் இணைவாா்கள்.