பெட்ரோல் விலை உயர்ந்தாலும், மனிதாபிமானம் இன்னும் உயிருடன் இருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெட்ரோல் பங்க் ஒன்றில், உணவு விநியோகம் செய்யும் பணியாளர் ஒருவரிடம் எரிபொருள் தீர்ந்துபோய் அவதியுற்றபோது, அங்குள்ள ஊழியர்கள் அவருக்கு உதவ மறுத்துள்ளனர்.

மேலும் அந்த இக்கட்டான சூழலில், அங்கிருந்த முதியவர் ஒருவர் முன்வந்து, அந்த இளைஞருக்கு பெட்ரோல் போட்டு உதவியது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் செயல் “பெட்ரோல் விலை அதிகமாக இருக்கலாம், ஆனால் மனிதாபிமானம் இன்னும் குறையவில்லை” என்பதை உரக்கச் சொல்கிறது. சுயநலம் மிகுந்த இந்த நவீன உலகில், அடையாளம் தெரியாத ஒருவருக்கு உதவும் வகையில் அந்த முதியவர் காட்டிய கருணை, மனிதாபிமானத்தின் மிக உயர்ந்த பண்பைப் பறைசாற்றுகிறது.

“>

இந்நிலையில் இத்தகைய சிறிய செயல்களே சமூகத்தில் நம்பிக்கையை விதைக்கின்றன. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி கடினமான சூழ்நிலையிலும் பிறருக்கு உதவும் மனப்பான்மையே உண்மையான மனிதநேயம் என்பதை அந்த முதியவர் தனது செயலின் மூலம் உலகுக்கு உணர்த்தியுள்ளார்.