உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், வீட்டில் வளர்க்கப்படும் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்று அதன் உரிமையாளரான கிரண் திரிவேதி என்பவரை மிகக் கொடூரமாகக் கடித்துக் குதறியுள்ளது. படுகாயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

‘ராபர்ட்’ என்று பெயரிடப்பட்ட இந்த நாய், சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு இதே வீட்டில் இருந்த 91 வயது பாட்டி மோகினியைத் தாக்கி அவர் உயிரிழக்கக் காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நாய் பொறியாளர் தீர பிரசாந்த் திவேதி என்பவரால் வளர்க்கப்பட்டு வருகிறது.

“>

 

பாட்டியின் உயிரைப் பறித்து, தற்போது தாயையும் தாக்கியுள்ள போதிலும், அந்த நாயை மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்க அதன் உரிமையாளர் மறுத்து வருகிறார்.