தாய்க்கும் சேய்க்குமான பிணைப்பு உலகறிந்த ஒன்றென்றாலும், தந்தை காட்டும் அன்பும் பாசமும் எந்த அளவுக்கு ஆழமானது என்பதை நிரூபிக்கும் வகையில் இணையத்தில் ஒரு நெகிழ்ச்சியான காணொளி தற்போது பெருமளவில் வைரலாகி வருகிறது. ரோசி மற்றும் ஹாரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளதுடன், பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கர்ப்ப காலத்தில் நாள்தோறும் தன் மனைவியின் வயிற்றில் கையை வைத்துப் பேசுவதையும், கதை சொல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்த அந்தத் தந்தை, தனது வரவிருக்கும் குழந்தையுடன் ஒரு அரிய பந்தத்தை ஏற்படுத்தியிருந்தார்.
வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றபோது எடுக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட் (Ultrasound) ஸ்கேன் சோதனையின்போதே இந்த அற்புதத் தருணம் அரங்கேறியுள்ளது. பரிசோதனைக் கருவி திரையில் தெரிபவைகளைக் கவனித்த தந்தை, லேசான குரலில் தன் மகனை நோக்கி ‘ஒருமுறை புன்னகை செய்’ என்று அன்பாகக் கோரிக்கை விடுத்துள்ளார். அடுத்த கணமே, கர்ப்பப்பையில் இருந்த அந்தப் பச்சிளம் உயிர் தனது உதடுகளை அசைத்து அழகாகச் சிரித்த விதம் அங்கிருந்த மருத்துவர்களையும் குடும்பத்தினரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
View this post on Instagram
இது வெறும் தற்செயலான நிகழ்வு அல்ல என்றும், இதற்குப் பின்னால் மருத்துவ அறிவியல் உண்மைகளும் உள்ளதாகவும் மருத்துவர்கள் விளக்குகின்றனர். பொதுவாகவே 25 முதல் 26 வாரங்களைக் கடந்த குழந்தைகள் தாயின் கருவறையில் இருந்தபடியே வெளி உலக ஒலிகளைக் கேட்கத் தொடங்குவதாகவும், தந்தையின் ஆழமான குரலை அவர்கள் எளிதில் அடையாளம் கண்டு விரைவாக எதிர்வினையாற்றுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன . தந்தையின் குரலைக் கேட்டு மறுமொழி தந்த இந்தக் குழந்தையின் விடியோவானது, வருங்கால பெற்றோர்கள் மத்தியில் தங்களது அஜான்ம குழந்தைகளுடன் அதிக நேரம் பேசிச் பழக வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
