பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணத்தில் ராணுவ தளம் அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் எல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ராணுவ தளத்தில் நேற்று காலை தற்கொலை படை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 23 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.