திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டைக்கு திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி சிவகார்த்திகேயன் நேற்று மாலை வருகை தந்துள்ளார். அதன் பின் அவர் வருடம் தோறும் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கும் ஜாம்புவானோடை சிவன் கோவில் பகுதியை பார்வையிட்டுள்ளார். அதனை தொடர்ந்து  ஊர்வலம் செல்லும் பாதையான தர்கா, பதற்றம் நிறைந்த ஆசாத் நகர், சிவராமன் ஸ்தூபி, திருத்துறைப்பூண்டி சாலை, புதுப்பள்ளிவாசல், ஓடக்கரை, பட்டுக்கோட்டை சாலை, பங்களாவாசல், பழைய பேருந்து நிலையம், செம்படவன் காடு போன்ற பகுதிகளை பார்வையிட்ட ஆய்வு செய்துள்ளார்.

இந்த ஆய்வின்போது தஞ்சை டி.ஐ.ஜி ஜெயச்சந்திரன், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், துணை போலீஸ் சுப்பிரன் விவேகானந் உள்பட போலீஸ் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து சிலை கரைக்கும் பாமணி ஆற்று படித்துறை, லகுன் செல்லும் பாதை மற்றும் படகு துறை போன்றவற்றை ஆய்வு செய்துள்ளார். இதன் பின் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வு செய்து அங்கு கோப்புகளையும் பார்வையிட்டு போலீசாரிடம் சந்தேகங்கள் குறித்து கேட்டறிந்தார்.