நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே பாவை பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி இணைந்து வேலை வாய்ப்பு முகாமை நடத்தியுள்ளது. இந்த முகாமில் திருப்பூர், வேலூர், தர்மபுரி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை  சேர்ந்த 26 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனையாளர்கள், மேலாளர், தட்டச்சர், கேசியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது. இந்த முகாமில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 200 பேருக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார். மேலும் முகாமில் தேர்ச்சி பெற்ற மூன்று மாற்று திறனாளிகளுக்கு புதிய ஊன்றுகோல்களை கலெக்டர் வழங்கியுள்ளார்.