கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாழக்குடி வீர நாராயணமங்கலம் தெற்கு தெருவில் வள்ளிநாயகம் என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான வள்ளிநாயகம் நேற்று முன்தினம் நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் குடும்ப நல நீதிமன்றத்திற்கு சென்றார். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் சென்று வர வசதிகள் இருக்கிறதா என பார்வையிட்ட வள்ளிநாயகம் திடீரென குடும்ப நல நீதிமன்றத்திற்கு அத்துமீறி நுழைந்தார்.

பின்னர் நீதிபதியிடம் வாக்குவாதம் செய்ததோடு நீதிமன்ற பணிக்கு இடையூறு ஏற்படுத்தி பணி செய்ய விடாமல் தடுத்தார். இதுகுறித்து தலைமை எழுத்தர் பெஞ்சமின் ஜோஸ் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வள்ளி நாயகத்தை கைது செய்தனர்.