கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழுதுர் கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவி உள்ளார். இவரது செல்போன் எண்ணுக்கு நேற்று காலை ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் இந்தியன் வங்கியில் இருந்து பேசுவதாகவும், மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் உங்கள் கணக்கில் ஏற்ற வேண்டும். எனவே உங்களது செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி என்னை கூறுங்கள் என தெரிவித்தார். அடுத்த சில நொடிகளில் செல்போனுக்கு வந்த ஓடிபி எண்ணை முத்தம்மாள் மர்ம நபரிடம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து முத்தம்மாளின் வங்கி கணக்கில் இருந்து 15,699 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. அப்போதுதான் செல்போனில் பேசிய மர்ம நபர் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் ஏற்ற உள்ளதாக கூறிய முதல் முறையில் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து முத்தம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.