கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருவிக்குழி விளை பகுதியில் சக்கரியாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிசிலி என்ற மனைவியும், 4 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நேற்று முன்தினம் சக்கரியாஸ் ரப்பர் பால் சேகரிக்கும் பணிக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்து மாலை வீட்டிற்கு வந்து சக்கரியாஸ் மதுபோதையில் தண்ணீர் என நினைத்து வீட்டில் ரப்பர் பால் உறைய வைப்பதற்காக பாட்டிலில் இருந்த திராவகத்தை குடித்தார்.

இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த சக்கரியாசை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்கரியாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.