கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறுமுகையில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பாலா நேற்று தனது சொந்த வேலை காரணமாக காரில் கோத்தகிரிக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் குஞ்சப்பணை சோதனை சாவடியை கடந்து சென்ற போது ஒரு வளைவில் பாலா காரை திருப்ப முயன்றார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் பக்கவாட்டில் இருந்த 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் பாலா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.