நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி, கண்ணம்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று காலை சப்பந்தோடு பகுதியைச் சேர்ந்த அஸ்வதி(20) என்பவர் கல்லூரிக்கு செல்வதற்காக தனது தாய் புனிதாவுடன்(42) பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த காட்டு யானை புனிதாவையும், அஸ்வதியையும் துரத்தியதால் இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஒரு கட்டத்தில் யானை இரண்டு பேரையும் துதிக்கையால் பிடித்து தூக்கி வீசி தாக்கியது.

அவர்களது சத்தம் கேட்டு அந்த பகுதியில் வசிககும் பொதுமக்கள் ஓடி வந்ததால் யானை அங்கிருந்து சென்றது. பின்னர் படுகாயமடைந்த இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கூடலூர் அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஆவதிக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.