பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூர் வடக்கு தெருவில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தாரணி(10), லிகாஷினி(7) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆகிலா தைராய்டு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதற்கான சிகிச்சையும் பெற்று வந்ததாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த அகிலா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அகிலாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.