பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நந்தியன் குடிகாடு கிராமத்தில் சரிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சரிதா தனது வீட்டிற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சரிதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சரிதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்