தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் பாலிவுட்டிலும் அதிக படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது மலையாள சினிமாவில் திலிப்புடன் இணைந்து ஒரு படம், தமிழில் நடிகர் ரஜினி நடிக்கும் ஜெயிலர், தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் போலோ சங்கர் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தமன்னா அண்மையில் அளித்த ஒரு பேட்டியில் நான் இரண்டு சூப்பர் ஸ்டார்களுடன் ஒரே நேரத்தில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, எனக்கு நடிகர் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு.

அந்த கனவு தற்போது நிறைவேறிவிட்டது. இதேபோன்று சிரஞ்சீவியுடன் போலோ சங்கர் படத்தில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு முன்பு நான் சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில்  நடித்திருந்தாலும் அது சிறிய வேடம். ஆனால் தற்போது போலோ சங்கர் படத்தில் முழுக்க முழுக்க நான் ஹீரோயினாக நடித்து வருவதோடு சிரஞ்சீவியுடன் நடனமாட வேண்டும் என்ற என்னுடைய ஆசையும் நிறைவேறியுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் இந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.