தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகத்தை ஆதரித்து சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ஜாதி மதம் கடவுள் பற்றி சிந்திப்பவன் மக்களைப் பற்றி சிந்திக்க மாட்டான். மக்களைப் பற்றி சிந்திப்பவன் ஜாதி மதத்தை சிந்திக்க நேரம் இருக்காது. பத்து ஆண்டுகள் ஆண்டும் நாட்டை பிச்சைக்கார நாடாக மட்டுமே மோடி மாற்றி உள்ளார். 90% நாடு ஏற்கனவே விற்கப்பட்டது. அதானி மற்றும் அம்பானி ஆகிய இருவரிடமும் தான் நாடு இருக்கிறது என்று சீமான் தெரிவித்துள்ளார்.