நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பெண்களின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் அதாவது மாதம் 8,500 வரவு வைக்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், நீங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருந்தால் உங்களுக்கும் இந்த பணம் கிடைக்கும். தட்டு தடுமாறி வரும் மக்களை முன்னேற்றுவோம். ஒரே அடியில் இந்தியாவில் இருந்து வறுமையை ஒழிப்போம் என்று கூறியுள்ளார்.